Friday, October 30, 2009

என்றென்றும் என்காதல்

அன்பே உன்னை
ஆழமாக காதலிக்கிறேன்
அதிகமாக காதலிக்கின்றேன்

உனது பேச்சின் இனிமையையும்
உனது அன்பான வார்த்தைகளையும்
அதனால் ஏற்படும் மலர்ச்சியையும்

நீ மென்மையாக தொடும்போது
ஏற்பட்ட ஸ்பரிசத்தையும்
இதழ்களால் இதயங்களை மௌனமாக்கி
உணர்வுடன் பேசி
பெண்மையை எனக்குள்
கிளர்ந்தெழச் செய்ததையும்

உனது களங்கமற்ற சிரிப்பையும்
அதில் தென்படும்
பளிங்குபோன்ற வெண்மையான அன்பையும்

பனி மலைமேல் மோதுவது போன்று
மலர்ச்சியை விரும்பியேங்கிய எனக்கு
ஒவ்வொரு நாளும்
நீ ஏற்படுத்திய சந்தோசங்களையும்

காலையில் தூக்கம் கலைத்து
தெம்பை தரும் உனது துயிலெழுப்பலும்
இரவில் தூங்க விடாமல் செய்யும்
உனது காதல் முனகல்களும்

அந்த நாட்களின் ஒவ்வொரு விநாடியையும்
உன் காதலின் மிதப்பில்
இருந்ததை எண்ணி
இன்றுவரை அல்ல என்றென்றும்
என் இதயத்திலிருந்து
உன்னை காதலிப்பேன்.

3 comments:

முல்லைப்பிளவான் said...

//அந்த நாட்களின் ஒவ்வொரு விநாடியையும்
உன் காதலின் மிதப்பில்
இருந்ததை எண்ணி
இன்றுவரை அல்ல என்றென்றும்
என் இதயத்திலிருந்து
உன்னை காதலிப்பேன்/////

நன்றாக உள்ளன. தொடரட்டும்

தேவன் மாயம் said...

அந்த நாட்களின் ஒவ்வொரு விநாடியையும்
உன் காதலின் மிதப்பில்
இருந்ததை எண்ணி
இன்றுவரை அல்ல என்றென்றும்
என் இதயத்திலிருந்து
உன்னை காதலிப்பேன்.
//

அழகான நினைவுகள்!!

விரும்பி said...

நன்றி முல்லைப்பிளவான்
நன்றி தேவன்மாயம்

உங்கள் கருத்துக்களுக்கு