Monday, January 18, 2010

ஒரு வரிப்பதில்!

வானவில் தோன்றுவதைப்போல
கானமயில் ஆடுவதைக் காண்பதைப்போல
கண்ணே உன் தரிசனத்திற்காய் நானிருப்பேன்
உன் நினைவில் நிமிடங்கள்
சலனமில்லாமல் கரைந்தது
நிசப்தமில்லாமல் வந்த நீ
என்ன வென்று கேட்டாய்
ஒரு வரியில் உன் பதிலுக்காய்!
ஒராயிராம் ஆண்டு காத்திருக்கலாம் என்றேன்
'இல்லை' என்பதும் ஒரு வரிப்பதிலென்றாய்!
செய்வதறியாது 'ஆம்' என்றேன் ஒரு வரியில்!!!

Friday, January 15, 2010

மௌனம்

சிரித்தாய் ஜீவனில்லை

கதைத்தாய் சுவையில்லை

பார்த்தாய் அர்த்தமில்லை

ஏனேன்று கேட்டேன்

ஒன்றுமில்லை என்று மௌனமானாய்!

மௌனத்தின் பொருள் கேட்டேன்

சலனமற்றுப் பார்த்தாய்

பார்வையில் புரிந்தது

பேசாதே என்று!

ஒன்றும்புரியாமல் சேர்ந்து விட்டேன்

உன்னுடன்

மௌனமாய்!