Friday, October 9, 2009

முதலிரவு


மனதில் புத்துணர்ச்சி
இனம்புரியா சந்தோசம்
அறையினுள் நுழையும் போது
கட்டிலின் மூலையில்
பவ்யமாக இருந்த என் அழகுப்பதுமை
எத்தனை நாள் காத்திருப்பு
இந்த ஒரு கணத்திற்காக!
பூரிப்பில் அருகில் சென்றமர்ந்தேன்
பரபரப்பு
சற்று நேரம் ஆசையுடன்
அழகை ரசித்தேன்
மெதுவாக கையால் தடவினேன்
பஞ்சுபோல் மெதுமையாக
சில்லிட்ட உரோமங்கள்
உந்திவிட்ட ஆவலில்
மேற்பாகம் தொட்டு மெதுவாக விலக்க
செக்கிச் சிவந்து
நெளிந்த உடற்பாகம்
மங்கிய அறை ஒளியில்
மின்மினியாய் ஒளிர்ந்தது
ஓவ்வொன்றாக விலக்கி
அழகின் புதிய பரிமாணத்தை
அங்குலம் அங்குலமாக
ரசித்தேன்
அழகிலே மயங்கி
மார்பில் சேர்த்தணைத்து மெதுவாக
என்னை முழுமையாக மறைத்தேன்
மார்கழிக் குளிரில் என்மேல் பரவி
சுகந்தத்தையும் இதமான சூட்டையும்
தந்தது எனது புதிய கம்பளிப்போர்வை

7 comments:

தேவன் மாயம் said...

மார்கழிக் குளிரில் என்மேல் பரவி
சுகந்தத்தையும் இதமான சூட்டையும்
தந்தது எனது புதிய கம்பளிப்போர்வை//

ஏமாத்திட்டீங்க மக்கா!

முல்லைப்பிளவான் said...

ரொம்பத்தான் குறும்பு செய்கிறிங்கள் குறும்பு குண்டன் அவர்களோ.

துபாய் ராஜா said...

நல்லா அன்பவிச்சு எழுதியிருக்கீங்க..

கிளைமாக்ஸ் அருமை.

வாழ்த்துக்கள்.

குறும்பு குண்டன் said...

வணக்கம்

தேவன்மாயம்
முல்லைப்பிளவன்
துபாய் ராஜா

இப்படியும் குறும்புசெய்யலாமா! என்ற ஒரு முயற்சி

கருத்துக்களுக்கும் , வருகைக்கும்

நன்றிகள்

கிடுகுவேலி said...

அட இதுவா....நான் அதையல்லாவா யோசித்தேன்..!! ம்ம்ம்ம் அருமையான கற்பனை.

குறும்பு குண்டன் said...

வணக்கம் கதியால்

இது .... இதுதான்

எதை யோசித்தீர்கள்........ம்......ம்....?

ஒன்றுமே புரியவில்லை!

நான் சின்னப்பையன்

கருத்துக்கு

நன்றிகள்

Punnakaimannan said...

கவிதை நன்றாகத்தான் உள்ளது.
//நான் சின்னப்பையன்//

இதுதான் ரொம்ப ரொம்ப..................................
ஓவரா இருக்கு