Friday, October 23, 2009

சாட்சியாய்.....!

சுற்றமும் சூழலும்
புடைசூழ
மேளதாளங்கள்
ஆடம்பரங்களுடன்
அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
படைக்கும்
உறவை காட்டிலும்!
உள்ளமும் உணர்வும்
புரிந்து கொண்ட
உறவே மேலானது
என்பதை
புரியாத மனிதர்களின் சாட்சியாய்!
எமது காதல்
இதயத்திலிருந்து வலிக்கின்றது!

6 comments:

புலவன் புலிகேசி said...

//புரிந்து கொண்ட
உறவே மேலானது
என்பதை
புரியாத மனிதர்களின் சாட்சியாய்! //

உண்மைதான்.......

கிடுகுவேலி said...

ம்ம்ம் யோசிக்க தூண்டும் சிந்தனை..ஆனால் வெற்றிகள் தோல்விகள் இரண்டிலும் உண்டு. ஒவ்வொருவரும் தமது நிலையை தெரியப்படுத்த அல்லது நியாயப் படுத்த முனைவதாகவே சில இடங்களில் படும். ஆனால் ஒப்பீட்டளவில் காதல் மேலானது என்பது எனது நிலை. அது சிறந்தது இது சிறந்தது என்று வாதாடுவதை விட கிடைக்கும் வாழ்வை சிறப்பாக்க முயல்வோம்.

க.பாலாசி said...

//உள்ளமும் உணர்வும்
புரிந்து கொண்ட
உறவே மேலானது
என்பதை
புரியாத மனிதர்களின் சாட்சியாய்!
எமது காதல்
இதயத்திலிருந்து வலிக்கின்றது!//

எனது பார்வையில் மிக நல்ல சிந்தனை வரிகள்.

கவிதை அருமை...

விரும்பி said...

வணக்கம் புலவன் புலிகேசி

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்

நன்றி

விரும்பி said...

வணக்கம் கதியால்

///அது சிறந்தது இது சிறந்தது என்று வாதாடுவதை விட கிடைக்கும் வாழ்வை சிறப்பாக்க முயல்வோம்.///

நல்ல கருத்து

என்றாலும்

அது சரி இது சரியென்ற விவாதங்களிற்கப்பால்
இணையாத காதல்கள் இதயத்திலிருந்து வலித்தேயாகும்

நன்றி கருத்துக்கு

விரும்பி said...

வணக்கம் பாலாஜி

நுணுக்கமான ரசனை உங்களிற்கு

கருத்துக்கு

நன்றி