Thursday, October 15, 2009

ஆராதனாவும் முப்பது நாட்களும்

மிகவேகமாக கடந்தது ஆராதனாவுடன் முப்பது நாட்கள். ஆக்கங்களைப் பதிவு செய்து புதிய நண்பர்கள், அறியாத மனிதர்களுடன் கருத்துப்பரிமாறும், கருத்து மோதல் செய்யும் வித்தியாசமான அனுபவம். ஒரு வேறுபட்ட புதிய உலகம்.நவீன தொழில்நுட்ப வளாச்சி தந்த புதிய ஊடகப்பதிவு. சுய சிந்தனைகள், கருத்துக்கள்,உண்மைகள், உணர்வுகளை பகிரும், பட்டைதீட்டும், அறிந்து கொள்ளும் அழகான தளம் வலைப்பூ. பதிவுகளை செய்யும் போது சுகமான பிரசவத்தின் பதட்டம், பின்னூட்டங்கள் வரும்போது சந்தோசம் போன்றன வலைப்பூ தந்த அனுபவங்கள்.

கவிதை, கட்டுரை, விவாதங்கள் என மனதில் உதித்தவற்றை கிறுக்க, அதற்கு கருத்துக்கூறும்போது ஏற்படும் ஒரு புத்துணர்ச்சி உத்வேகத்தை தர, தேடலும் இணைந்து இப்புதிய உலகத்தில் நடைபயின்று முப்பது நாட்கள் இன்றுடன்.

தொடர்ந்து வந்தும் நயமான கருத்துக்களைப் பின்னூட்டியும் ஆக்கம் தரும் நண்பர்களான கதியால், முல்லைப்பிளவன்,கவி, பொன்னி , பவி, க.பாலாஜி, வெண்ணிற இரவுகள், புலவன் புலிகேசி, தேவன்மாயம், வசந்குமார், சூரியா கண்ணன், நாமக்கல் சிபி, வால்பையன், அத்திவெட்டி பாரதி, ரமேஸ், அருள், அமுதா கிருஷ்ணன், துளசிகோபால், பிரபா, நிலாமதி, வெங்கட், சந்திரவதனா, ரங்குடு, பின்னோக்கி, உத்தம புத்திரன், ஜிவிதன், சிங்கக்குட்டி, துபாய்ராஜா, பிரியமுடன் வசந், எலட், வனம் இராஜராஜன்,விஜய்,செந்தழல் ரவி, அருள், கோகுல், சந்ரு, ரப் மற்றும் பெயரில்லாப் பின்னூட்டுனர்களுக்கும் தமிழிஸ், உலவு, தமிழ்மணம், தமிழ் திரட்டி தளங்களினூடாக வாக்களித்து ஊக்குவித்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதுடன் உங்கள் தொடர் ஆதரவையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கும் ஆராதனாவின் வலைப்பூக்கள் பதிவாளர்கள்.

4 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் மேலும் சிறக்கட்டும் உங்கள் பணி....

முல்லைப்பிளவான் said...

தொடரட்டும் உங்கள் பல்சுவை பதிவுகள். வாழ்த்துக்கள்

கிடுகுவேலி said...

தொடரட்டும்...வாழ்த்துக்கள்....!!

விரும்பி said...

வணக்கம் கதியால்
வணக்கம் பிரியமுடன் வசந்த்
வணக்கம் முல்லைப்பிளவான்

நன்றி தங்களின் வாழ்த்துக்களுக்கு