Thursday, October 8, 2009

முதல்...........!


பூவிதழால் வருடுவது போன்ற
மென்மை
சிலிர்த்தது போலிருந்தது!
உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை
உணர்ச்சி நரம்புகளில் மின்சாரம் ஊடுருவிச் சென்றதைப்போல
ஒரு வகை உணர்வுப்பிரவாகம்!
மகுடிக்கு மயங்கிய பாம்புபோல
உடலும் மனமும் கட்டுண்டு கிடக்க
புதுவகை உணர்வின் இன்பத்தேடலில்
விலக முயலாமல் உடல் தளர்வடைய
என்னை அறியாது
கண்களும் சொருக.....
தயவுசெய்து கேட்காதே
இப்போது நினைத்தாலும்
சிலிர்க்கின்றது – உடல்
படபடக்கின்றது - இதயம்
உணர்வுகள் உந்துகின்றன
ம் .... ம்
புரியவில்லை!
சொல்ல முடியவில்லை!
உன் முதல் முத்தம் எப்படியிருந்ததென்று!

4 comments:

கிடுகுவேலி said...

வாசிக்கும் போதே....கிறுங்குகிறது...!! அனுபவித்தால்தான் அதிகம் சொல்ல முடியும்...!!!

குறும்பு குண்டன் said...

வணக்கம் கதியால்

ம்......ம்.....ம்

நன்றி

வெண்ணிற இரவுகள்....! said...

உங்கள் கவிதைகள் முத்தமிட நாங்களும் நனைந்தோம்

குறும்பு குண்டன் said...

வணக்கம் வெண்ணிற இரவுகள்

///உங்கள் கவிதைகள் முத்தமிட நாங்களும் நனைந்தோம்///


மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்