Monday, November 23, 2009

உனக்கு ஒன்றை சொல்ல வேண்டும்

இலையுதிர் கால வேளை
பளிங்கு போல தெரியும்
நிலாவின் மெல்லிய ஒளியில்
நிலா தரையிலா? என தடுமாற வைத்த
உன் முகத்தை!
யன்னலருகில் நின்று
ரசித்த காலங்கள் பல!

குளிர் காலவேளை
ஒரு சிறிய தீவில்
நெருப்பின் இதமான சூட்டில்
தனிமையில்
உன் அணைப்பின் சுகத்தில்,
இருந்தது எல்லாம் இன்னும்
பசுமையான நினைவுகளாக!

என்றாலும் நீ தற்போது
கொஞ்சம் கொஞ்சமாக
காதலிப்பதை நிறுத்தியதால்
நானும் அவ்வாறே நிறுத்த
முயல்கின்றேன்.
திடீரென நீ மறக்க நினைத்தால்
பின்னர்
என்னை பார்க்க முயற்சிக்காதே!
நானும் உன்னை மறந்திருப்பேன்.

நீ, விருப்பியிருந்ததை
முட்டாள் தனமென நினைக்கலாம்
வாழ்க்கைப்பாதையில்
சூறாவளி கடந்து விட்டதாக நினைக்கலாம்
பசுமையான நினைவுகளை ஆழ்மனதில் புதைத்து
என்னைக் கைவிட தீர்மானித்திருக்கலாம்
அந்த நாளையும், நிமிடத்தையும்
நினைக்கலாம்!
நான் இன்னொரு வாழ்க்கையை நோக்கி
நகர்ந்து விடுவேன் எனவும் கருதலாம்

ஆனால்!
எவ்வளவு நாட்களானாலும்
எத்தனை மணிகள் கடந்தாலும்
இனிமையான காதலால்
நீ எனக்கு விதிக்கப்பட்டவள்
என நினைக்கலாம்!
அன்று உன் மனதின் உந்தலில்
என்னைத் தேடுவாய்!
எனது காதல் எனக்கு சொந்தமானது
என பிரியப்படுவாய்!
அப்போதும் வெறுப்பதற்கும் மறப்பதற்கும்
ஒன்றுமிருக்காது
அப்போதும் எனது காதல் எமது காதலை
புதுப்பிக்கும் அன்பே!
எவ்வளவு காலமானாலும்
விலகமுடியாமல்
உன்னிடத்தில் இருக்கும்
என்காதல்